குடியாத்தம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு!

58பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஐபிஎஸ் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது காவல் நிலையத்தில் உள்ள பதிவேடுகளை பார்வையிட்ட எஸ் பி பதிவேடுகளை சரியாக பராமரிக்க வேண்டும். முக்கிய குற்றவாளிகளை கண்காணிக்க வேண்டும். புகார் மனுக்களை அழிக்க வரும் பொது மக்களிடம் காவல் நிலைய வரவேற்பாளர்கள் கனிவாக நடந்து கொண்டு அவர்களின் குறைகளை கேட்டறிய வேண்டும் என அறிவுறுத்தினார்.

பின்னர் மனுக்கள் மீதான விசாரணை மற்றும் நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து கேட்டறிந்த அவர் உடனடியாக அனைத்து மனுக்கள் மீதும் விசாரணை நடத்த வேண்டும். பதிவான வழக்குகளை விரைந்து புலன் விசாரணை செய்து நீதிமன்றத்தில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி