தந்தையின் கண் முன்னே டிராக்டரில் சிக்கி மகன் உயிரிழப்பு

1084பார்த்தது
வேலூர் மாவட்டம், லத்தேரி அடுத்த கூக்கலபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன், கவிதா தம்பதியினர் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இளைய மகன் பரத்குமார் 8 வயது, கூக்கலபள்ளி அரசு ஆரம்பப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று விடுமுறை நாள் என்பதால் தனது தந்தையுடன் கூக்கலபள்ளி கொள்ளை மேடு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேர்க்கடலை விளைவிப்பதற்காக டிராக்டர் மூலம் உழுவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ஆதிகேசவன் என்பவரை அழைத்துள்ளார். அவர் அவருடைய டிராக்டரை கொண்டு வந்து நிலத்தில் உழுவதற்காக நிறுத்தி வைத்திருந்தபோது பரத்குமார் டிராக்டரின் பின்புறம் உள்ள ரோலர் மீது ஏறி நின்று உள்ளார் அப்போது ஆதி கேசவன் டிராக்டரை நிலத்தில் உழுவதற்காக எடுத்தபோது நிலை தடுமாறி பரத்குமார் கீழே விழுந்து உள்ளார்.

அப்போது டிராக்டர் ரோலரில் சிக்கி தந்தையின் கண் முன்னே உடல் நசுங்கி உயிரிழந்திருக்கிறார்.
சம்பவம் குறித்து லத்தேரி காவல்துறையினருக்கு தகவல் அளித்ததின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி