மூன்று மேம்பாலங்களை திறந்துவைத்த அமைச்சர் எ.வ. வேலு

73பார்த்தது
மூன்று மேம்பாலங்களை திறந்துவைத்த அமைச்சர் எ.வ. வேலு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆவாரங்குப்பம் பகுதியில் ரூ. 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 மேம்பாலங்களை அமைச்சர் எ. . வேலு திறந்து வைத்தார்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் மேம்பாடு சார்பில் வாணியம்பாடி அடுத்த ஆவாரங்குப்பம் - நாராயணபுரம் கிராமங்களை இணைக்கும் வகையில் ரூ. 18.40 கோடி மதிப்பில் பாலாறு மற்றும் பாலாறின் கிளையாறான மண்ணாறு குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டது.

இதே போல் திருப்பத்தூர் சாலையில் குரிசிலாபட்டு - பள்ளத்தூர் கிராங்களை இணைக்கும் வகையில் ரூ. 1.80 கோடி மதிப்பீட்டில் பம்பாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டது. மேலும் நாட்டறம்பள்ளி அருகே பச்சூர் - கொத்தூர் கிராமங்களை வகையில் ரூ. 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சரஸவதி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டது. மேற்கண்ட மூன்று உயர்மட்ட மேம்பாலங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு விழா ஆவாரங்குப்பம் உயர்மட்ட மேம்பாலம் அருகே நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி