தனியார் பள்ளியில் வாயுக்கசிவு.. மாணவிகள் மயக்கம்

72பார்த்தது
தனியார் பள்ளியில் வாயுக்கசிவு.. மாணவிகள் மயக்கம்
சென்னை திருவொற்றியூர் கிராம தெரு அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் நிலையில் திடீரென கெமிக்கல் வாசம் வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் மூன்று மாணவிகள் மயக்கமடைந்த நிலையில் உடனடியாக பள்ளியில் உள்ள அனைத்து குழந்தைகளும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மயங்கிய மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி