தீபாவளியை முன்னிட்டு ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

70பார்த்தது
சேலம் ஆத்தூர் அருகே, வீரகனூரில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச்சந்தை கூடுவது வழக்கம். இங்கு ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, சின்னசேலம், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி வழக்கத்தை விட இன்று 4,000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தது. இதில் 3,000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்ததில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி