போதைப்பொருள் கடத்தல்.. தவெக நிர்வாகி உள்பட 2 பேர் கைது

79பார்த்தது
போதைப்பொருள் கடத்தல்.. தவெக நிர்வாகி உள்பட 2 பேர் கைது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, தடைசெய்யப்பட்ட குட்கா போதைப்பொருள் கடத்திய தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ரியாசுதீன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர். விக்கிரவாண்டியில் நாளை (அக்.27) தவெக மாநாடு நடைபெறவுள்ள நிலையில் அக்கட்சியின் நிர்வாகி கைது செய்யப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி