ராணிப்பேட்டை அரக்கோணத்தில் இருந்து சுமார் 20 பேர் சேர்ந்து டெம்போ வேன் மூலம் ஒகேனக்கலுக்கு நேற்று (மே 26) நள்ளிரவு சுற்றுலாப் புறப்பட்டனர். அப்போது, அப்துல்லாபுரம் ஏரோட்ரம் மேம்பாலத்தில் சென்றபோது, முன்னாள் சென்ற கண்டைனர் லாரி மீது வேன் மோதியது. இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.