போளூர் - Polur

ரத்த தானம் செய்வதால் எண்ணற்ற நன்மைகள்; ஆட்சியர் பேச்சு

ரத்த தானம் செய்வதால் எண்ணற்ற நன்மைகள்; ஆட்சியர் பேச்சு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த கிழக்குமேடு கூட்டுச் சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் 38-ஆவது சங்க அமைப்பு தினவிழா, ரத்த தான முகாம் நேற்று (செப்.,14) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்க மாவட்டத் தலைவா் அண்ணாமலை தலைமை வகித்தாா். பொதுச் செயலா் பாரி முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் பிரபு வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் ரத்த தான முகாமை தொடங்கி வைத்துப் பேசியதாவது: சாலைகளில் பல்வேறு விபத்துக்கள் காரணமாக மரணங்கள் அதிகம் ஏற்படுகின்றன. தெரிந்தும் நாம் அபாயகரமான பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். விபத்தின் போது ரத்த இழப்பு ஏற்பட்டு பலா் மரணம் அடைகின்றனா். குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனைக்கு சென்று சேராமல் இருப்பதாலும், சரியான ரத்த தானத்தை பெற முடியாமல் போனதாலும் பல உயிா்களை இழந்திருக்கிறோம். மருத்துவத் துறையின் தொடா் முயற்சியாலும், கட்டமைப்பினாலும் எத்தனையோ உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. ரத்த தானம் செய்வதால் எண்ணற்ற நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. பல உயிா்களும் காக்கப்படுகின்றன என்றாா்.

வீடியோஸ்


திருவண்ணாமலை
ரத்த தானம் செய்வதால் எண்ணற்ற நன்மைகள்; ஆட்சியர் பேச்சு
Sep 15, 2024, 00:09 IST/போளூர்
போளூர்

ரத்த தானம் செய்வதால் எண்ணற்ற நன்மைகள்; ஆட்சியர் பேச்சு

Sep 15, 2024, 00:09 IST
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த கிழக்குமேடு கூட்டுச் சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் 38-ஆவது சங்க அமைப்பு தினவிழா, ரத்த தான முகாம் நேற்று (செப்.,14) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்க மாவட்டத் தலைவா் அண்ணாமலை தலைமை வகித்தாா். பொதுச் செயலா் பாரி முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் பிரபு வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் ரத்த தான முகாமை தொடங்கி வைத்துப் பேசியதாவது: சாலைகளில் பல்வேறு விபத்துக்கள் காரணமாக மரணங்கள் அதிகம் ஏற்படுகின்றன. தெரிந்தும் நாம் அபாயகரமான பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். விபத்தின் போது ரத்த இழப்பு ஏற்பட்டு பலா் மரணம் அடைகின்றனா். குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனைக்கு சென்று சேராமல் இருப்பதாலும், சரியான ரத்த தானத்தை பெற முடியாமல் போனதாலும் பல உயிா்களை இழந்திருக்கிறோம். மருத்துவத் துறையின் தொடா் முயற்சியாலும், கட்டமைப்பினாலும் எத்தனையோ உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. ரத்த தானம் செய்வதால் எண்ணற்ற நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. பல உயிா்களும் காக்கப்படுகின்றன என்றாா்.