சேத்துப்பட்டு அருகே மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்.

62பார்த்தது
பொது மக்களுக்கான அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்றுசேரும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் முதல்வர் ஸ்டாலினின் நேரடி கண்காணிப்பில் முதல்வரின் முகவரித் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் சார்பில் மொடையூர் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது இம்முகாமிற்கு திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய பெருங்குழு தலைவர் தலைவர் ராணி அர்ஜுனன் முன்னிலை வகித்தார்.

வருவாய்த்துறை, ஊராட்சித் துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

தொடர்புடைய செய்தி