தமிழக ஆளுநருக்கு சிறப்பு வரவேற்பு

81பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் , ஜவ்வாதுமலையில் விளாங்குப்பம் கிராமத்தில் பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி வருகை தந்தார். விளாங்குப்பம் கிராமத்திற்கு வருகை தந்த ஆளுநருக்கு மலைவாழ் மக்கள் தாரை தப்பட்டை முழங்க மலர்கள் தூவி ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும் விளாங்குப்பம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் சார்பில் ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர், பழங்குடியின மக்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் திட்டங்கள் குறித்த பதாகைகளை பார்வையிட்டார். மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த சிறுதானிய உணவு கண்காட்சியையும் பார்வையிட்டார். ‌ இந்திய வரலாற்றிலேயே ஜவ்வாதுமலை மலை கிராமங்களுக்கு ஆளுநர் ஆர். என். ரவி மூன்றாவது முறையாக வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் ரவிக்கு மலை வாழ் மக்கள் ஜவ்வாது மலையில் விளையக்கூடிய சிறுதானியங்கள் சாமை மற்றும் சீதாப்பழம், கொய்யாப்பழம், வாழைப்பழம், விளாம்பழம், உள்ளிட்ட பல வகைகள். மேலும் இளநீர், ஜவ்வாதுமலையின் மலைத்தேன் உள்ளிட்டவைகளை அன்பளிப்பாக வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி