காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைத்த எம்எல்ஏ

78பார்த்தது
காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைத்த எம்எல்ஏ
தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் ஊரகப் பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு வழங்கும் திட்டத்தினை, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஒன்றியம், தானிப்பாடி ஊராட்சியில் உள்ள கிருஸ்த்துஜோதி மேல்நிலைப்பள்ளியில் 1- 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி காலை உணவுகள் வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் தண்டபாணி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் #
பொன் தனுசு, ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், மாவட்ட கவுன்சிலர் முத்துமாறன், ஒன்றிய துணை செயலாளர் குமார், மாவட்ட துணை அமைப்பாளர்கள் வசந்த், ரகுபதி, வில்லியம்ஸ், நீலகண்டன், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி