திருப்பூர் மாவட்டம் உடுமலை தினசரி சந்தைக்கு உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் தினமும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பல இடங்களில் காய்கறி கழிவுகள் தேங்கி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ள காரணத்தினால் சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் காய்கறிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.