ஜிம்முக்கு சென்ற இளைஞர் பலி.. உறவினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

79பார்த்தது
ஜிம்முக்கு சென்ற இளைஞர் பலி.. உறவினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த ராம்கி (36) 6 மாதங்களாக ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் ஜிம் பயிற்சியாளரின் ஆலோசனைப்படி, அதிக அளவில் புரோட்டீன் பவுடர் மற்றும் ஸ்டீராய்டு ஊசியை ராம்கி செலுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ராம்கி உயிரிழந்ததாக குற்றம் சாட்டியுள்ள உறவினர்கள், மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஸ்டீராய்டு ஊசி செலுத்தக்கூறிய ஜிம் பயிற்சியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி