திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை பாஜக சார்பில், ஸ்தாபன தினத்தை முன்னிட்டு செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
உடுமலை நகரத்தலைவர் அருணாச்சல பாலகுரு தலைமையில், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர்
மோகனப்பிரியா , மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் கோவை பெருங்கோட்ட பொறுப்பாளரும் , மாநில பொதுச் செயலாளருமான ஏ. பி. முருகானந்தம் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் மாவட்ட , நகர , கிளை நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களிடம் மாநிலபொது செயலாளர் ஏ. பி. முருகானந்தம் பேசும்பொழுது,
இன்றைய தினம் பாஜகாவை பொருத்தமட்டில் , ஆத்மார்த்தமாக எங்களது மனதோடு ஒன்றி இருக்கக்கூடிய சிறப்பு வாய்ந்த நாள், கட்சியின் ஸ்தாபன தினத்தை முன்னிட்டு, இந்தியா முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை , தலைவர்களும், தொண்டர்களும் , ஆங்காங்கே உள்ள ஏழை, எளிய மக்களுக்கு, பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் திட்டங்களை சேர்க்கும் பணிகள், அந்தந்த பகுதி மக்களுக்கு தொண்டாற்றுவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் பாஜகவின் 65 ஆயிரம் கிளைகளிலும், கிளைத் தலைவர்களை முன்னிலையில், நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அத்தனை இடங்களிலும் பொதுமக்களும் கலந்து கொண்டு உள்ளார்கள். மக்களின்எதிர்பார்பை பூர்த்தி செய்யும் கட்சியாக பாஜக உள்ளது என்றார்.