உடுமலையில் மண்பானைகள் விற்பனை அமோகம்

66பார்த்தது
உடுமலையில் மண்பானைகள் விற்பனை அமோகம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது. இதனால் வெயிலுக்கு இயற்கையாக குளிர்ச்சியான குடிநீர் வழங்கும் மண் பானைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. 

தண்ணீர் பானைகள், பூஜா ஜாடி, உருண்டை வடிவம், பழைய செம்பு பானை வடிவத்தில் உள்ள மண்பானை, குழாய் பொருத்திய பானை உட்பட விற்பனைக்கு வந்துள்ளது. சிறிய அளவிலான பானைகள் 50 முதல் 100 ரூபாய்க்கும், 10 லிட்டர், 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட பானைகள் 200 முதல் 600 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகின்றதாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி