உடுமலையில் பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம்

2302பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் வருகின்றது. இந்த நிலையில் இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் அறிமுக கூட்டம் உடுமலை நகர பாஜக சார்பில் ஐஸ்வர்யா நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நகர தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் பேசியதாவது தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன தற்பொழுது திமுகவை மக்கள் புறக்கணிக்க தொடங்கி விட்டார்கள் அதிமுக சிதறிப் போய் உள்ளது குறிப்பாக மன்சூர் அலிக்கான் கூட்டணிக்கு வந்து கூட்டணி வேண்டாம் என்று சொல்லும் நிலையில் அதிமுக உள்ளது. எனவே திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாஜக உருவெடுத்து வருகின்றது எனவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மோடி அலே தமிழகத்தில் வீசுவது உறுதி திராவிட கட்சிகள் தோற்கடிக்கப்படும் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என பேசினார். திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதீஸ்வரி கந்தசாமி, மாநில விவசாய அணி செயலாளர் மௌன குருசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி