கேவலமாக பேசிய வங்கி ஊழியர்: பெண் செய்த சம்பவம்

50பார்த்தது
கேவலமாக பேசிய வங்கி ஊழியர்: பெண் செய்த சம்பவம்
சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி. குளிர்சாதன பெட்டி வாங்குவதற்காக எழும்பூரில் உள்ள தனியார் வங்கியில் ரூ.42000 கடன் வாங்கி இருக்கிறார். 8 தவணைகளில் 6 தவணைகள் செலுத்திய நிலையில், அடுத்த தவணை கட்ட 5 நாட்கள் தாமதமாகி உள்ளது. இதனால் வங்கி ஊழியர்கள் அவருக்கு போன் செய்து தரக்குறைவாக திட்டியுள்ளனர். அவர்கள் பேசிய ஆடியோ ஆதாரங்களுடன் ஆர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி