நேர்காணல் ஒன்றில் ஆயிரத்தில் ஒருவன் -2 குறித்து செல்வராகவனிடம் கேட்கப்பட்டது. அதற்கு, "ஆயிரத்தில் ஒருவன் 2" படத்திற்கு பெரிய தயாரிப்பு நிறுவனம் தேவை. VFX மற்றும் AI தொழில்நுட்பத்தின் விலை குறைவாக இருப்பதால் இப்படத்தை எடுப்பது இன்னும் சுலபமாக இருக்கும். ஆனால், நான் மட்டும் நினைத்தால் இப்படம் உருவாகாது. அதற்கான நட்சத்திர பட்டாளங்களும் அவர்களிடமிருந்து ஓராண்டு கால்ஷீட்டும் தேவை. இரண்டாம் பாகத்தில் தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆனால், கார்த்தி இல்லாமல் இப்படம் உருவாகாது" என்றார்.