சிறைக்கைதிகளுக்கு பாதுகாப்பு - பதிலளிக்க உத்தரவு

84பார்த்தது
சிறைக்கைதிகளுக்கு பாதுகாப்பு - பதிலளிக்க உத்தரவு
தமிழ்நாட்டு சிறைகளில் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு, மாநில மனித உரிமை ஆணையம், சிறைத்துறை அதிகாரிகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாமினில் வந்த கேரளாவைச் சேர்ந்த அஷ்வின்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் வேலூர் சிறையில் கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு, அடித்து சித்ரவதை செய்யப்படுவதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி