ஆம்ஸ்ட்ராங் கொலை - முக்கிய குற்றவாளி கைது

84பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் கொலை - முக்கிய குற்றவாளி கைது
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ரவுடி புதூர் அப்பு கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் தலைமறைவாக இருந்த ரவுடி புதூர் அப்புவை தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கைக் கொல்ல நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்த இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வழக்கில் இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி