திருப்பூர் மங்கலம் சாலையிலிருந்து காதர் பேட்டை அருகே வரும் ஒருவழிப்பாதையில் நீண்ட நாட்களாக பாலம் கட்டும் பணி நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: -
மங்கலம் சாலையிலிருந்து வரும் ஒருவழிப்பா தையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலம் கட்டும் பணி நடைபெற்றது. தற்போது பாதி பாலம் போட்ட நிலையில் சாலையின் நடுவே இரும்பு தடுப்புகள் போட்டு வைக்கப் பட்டுள்ளது. இந்த சாலையில் வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
மேலும் வாகன ஓட்டிகள் அந்த இடத்தை கடந்து செல்ல மிகுந்த சிரமத்திற்கு உள் ளாகி வருகின்றனர். ஏதேனும் விபத்து ஏற் பட்டு உயிரிழப்பு ஏற்படுவதற்குள் மாநகராட்சி நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வாகன ஓட்டிகள் தெரி வித்தனர்.