நீர்மோர் பந்தல் திறப்புவிழா

588பார்த்தது
நீர்மோர் பந்தல் திறப்புவிழா
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் தீரன் கல்வி அறக்கட்டளையின் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா கொங்கு மெயின் ரோட்டில் நடைபெற்றது. கொ. ம. தே. க. திருப் பூர் மாநகர் மாவட்ட செயலாளர் ரோபோ டி. ரவிச்சந்திரன், திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் ஆகி யோர் கலந்து கொண்டு, நீர்மோர் பந்தலை திறந்து வைத்தனர். இதில் 31-வது வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன், கொ. ம. தே. க. திருப் பூர் மாநகர் மாவட்ட பொருளாளர் வேலு மணி, துணைச்செயலாளர் தம்பி வெங்கடாச லம், வெல்டெக்ஸ் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தொழிற்சங்க மாவட்ட செயலாளர் செல்வநா யகி செந்தில் செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி