சத்தீஷ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

56பார்த்தது
சத்தீஷ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை
சத்தீஷ்காரின் நாராயன்பூர் மற்றும் கன்கர் மாவட்டங்களின் எல்லையையொட்டி வனப்பகுதியில் இன்று காலை மாநில சிறப்பு தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் போலீசார் மீது திடீர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து போலீசாரும் பதிலடி துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி