புதுக்கோட்டை: குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கவில்லை

81பார்த்தது
புதுக்கோட்டை: குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கவில்லை
புதுக்கோட்டை, கந்தர்வகோட்டையில் சங்கம்விடுதி ஊராட்சியிலுள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த ஏப். 25ஆம் தேதி மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அந்தத் தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரி, ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், நீர் தேக்க தொட்டியில், மாட்டு சாணம் கலக்கவில்லை என்று ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. நீண்ட நாட்களாக குடிநீர் தொட்டி சுத்தம் செய்யாததால் குப்பைகள் அதில் தேங்கியுள்ளது. இதனை பொதுமக்கள் மாட்டு சாணம் என்று நினைத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி