திருப்பூர்: ஆட்டோக்களை சேதப்படுத்திய 2 பேர் கைது

72பார்த்தது
திருப்பூர்: ஆட்டோக்களை சேதப்படுத்திய 2 பேர் கைது
திருப்பூர் அனுப்பர்பாளையம்- அங்கேரிபாளையம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து பாண்டி (வயது 27). இவர் அதே பகுதியில் 5 ஆட்டோக்களை வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவருக்கும் கார் கன்சல்டிங் நிறுவன உரிமையாளரான கார்த்தி என்பவருக்கும் தனிப்பட்ட முறையில் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி மாலை இசக்கிமுத்து பாண்டியை செல்போனில் தொடர்பு கொண்ட கார்த்தி தகாத வார்த்தையால் பேசி உள்ளார்.

மேலும் அதே நாளில் கார்த்தி மற்றும் அவருடைய நண்பர்களான செல்வம், பூமி, பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இசக்கிமுத்து பாண்டிக்கு சொந்தமான 2 ஆட்டோக்களை சேதப்படுத்தியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து இசக்கிமுத்து பாண்டி கொடுத்த புகாரின்பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வம், பிரபாகரன் உள்ளிட்ட 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைம றைவாக உள்ள கார்த்தி, பூமியை போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி