பல்லடம்: பெண்ணிடம் நகை பறிப்பு - 2 பேர் கைது

2551பார்த்தது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காரணம்பேட்டை பகுதியில் நேற்று மதியம் தன் வீட்டிற்கு நடந்த சென்ற சரண்யா என்ற பெண்ணை பின் தொடர்ந்து வந்த இரண்டு பேர் சரண்யா வீட்டிற்கு வந்தபோது மிளகாய் பொடியை  முகத்தில் தூவி வீட்டில் உள்ளே கட்டிப்போட்டு அவரிடம் இருந்த மூன்று சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றனர்.   இது குறித்த பல்லடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இச்சிப்பட்டி பகுதியை சேர்ந்த லோகராஜ் மற்றும் தாமரைக்கண்ணன் ஆகியோரை கைது செய்து களவு பொருளை மீட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி