உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜான்பூரில் கல்லூரி மாணவிகளுக்கு நடந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சாலையில் சென்றுகொண்டிருந்த கல்லூரி மாணவிகளிடம் சில இளைஞர்கள் தகாத முறையில் நடந்துள்ளனர். அப்பெண்கள் குறித்து அசிங்கமாக கமெண்ட் அடித்ததால் அப்பெண்கள் அவர்களை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், பெண்களின் தலை முடியைப் பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி கண்டனங்களைக் குவித்து வருகிறது.