ஜம்மு காஷ்மீரில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு

71பார்த்தது
ஜம்மு காஷ்மீரில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் காண மழை காரணமாக மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக, ஜீலம் நதியின் துணை நதியான சீலு நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குப்வாரா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடக்கு காஷ்மீர் பகுதியான பூஞ்ச் மாவட்ட பகுதியில் வெள்ள பாதிப்பு காரணமாக நிலச்சரிவுகளும் ஏற்பட்டதால் அங்கு பெருமளவு சேதமடைந்துள்ளன. பொதுமக்களை வெள்ள பாதிப்பில் இருந்து மீட்கும் முயற்சியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி