வெள்ளகோவிலில் ஒரே நாளில் ஒரு கோடி வரி வசூல் செய்து சாதனை

2228பார்த்தது
வெள்ளகோவிலில் ஒரே நாளில் ஒரு கோடி வரி வசூல் செய்து சாதனை
2024-25 ஆம் ஆண்டுக்கான வரி வசூல் ஏப்ரல் மாதத்திலேயே தொடங்கியது. வெள்ளகோவில் நகராட்சிக்கு வரவேண்டிய குடிநீர் வரி, சொத்து வரி,  தொழில் வரி ஆகியவற்றை பணியாளர்கள் நேரடியாக சென்று முன்கூட்டியே வசூல் செய்து வருகின்றனர். இவ்வாறு முன்கூட்டியே செலுத்துபவர்களுக்கு 5% சலுகை வழங்கப்படுகிறது.  இதனால் பல தொழிலதிபர்கள் விரும்பி ஒரே தவணையில் தங்களுடைய வரிகளை செலுத்தி வருகின்றனர்.

வெள்ளகோவில் நகராட்சியின் ஆண்டு மொத்த வரி வசூல் 20 சதவீதம் அதாவது ஒரு கோடி ஒரே நாளில் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்ட வருவாய் ஆய்வாளர் குருசாமி மற்றும் உதவியாளர்கள் சசி, கோபி, முருகானந்தம் ஆகியோருக்கு நகராட்சி ஆணையர் வெங்கடேஸ்வரன் சால்வை அணிவித்து, கேடயம் வழங்கி ஊக்குவித்தார். மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முன்கூட்டியே வரியினங்களை செலுத்தி உதவுமாறு நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி