உணவு பஞ்சம்: காகிதங்களை உண்ணும் விலங்குகள்

76பார்த்தது
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள மரம், செடி, கொடிகள் அனைத்தும் காய்ந்து கிடைக்கிறது. நீர் நிலைகளும் வற்றிப் போய் காணப்படுகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை பகுதியில் குரங்குகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகள் உண்ண உணவின்றி குப்பையில் கிடக்கும் காகிதங்களை உண்ணும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி