மணமகன் கருப்பாக இருந்ததால் திருமணத்தை நிறுத்திய பெண்

54பார்த்தது
மணமகன் கருப்பாக இருந்ததால் திருமணத்தை நிறுத்திய பெண்
உ.பி. ராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன், மொஹல்லா பாடி கேட் பகுதியைச் சேர்ந்த சோனு என்பவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது. ஏப்ரல் 26ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணமகன் கருப்பாக இருப்பதாக கூறி பெண்ணின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினர். இதைக் கேட்டு மணமகளும் றதிருமணம் வேண்டாம் என மறுத்துவிட்டார். இதனால் மணமகன் சோகத்துடன் திரும்பிச் சென்றார். இரு குடும்பங்களுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி