தனியார் வாகனங்களில் இருக்கும் நம்பர் பிளேட்க்கான கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில், அங்கீகரிக்கப்படாத நம்பர் பிளேட்டுகள், ஸ்டிக்கர் மற்றும் இதர சின்னங்கள் ஆகியவற்றை ஒட்டியிருக்கும் வாகன ஓட்டிகளுக்கு மே 2ஆம் தேதி முதல் ரூ.500 முதல் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும் எனப் போக்குவரத்துக் காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும், அவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் வாகன ஓட்டிகள் மே 1ஆம் தேதி வரை தங்களது வாகனத்தில் இருக்கும் நம்பர் பிளேட்டுகளில் இருக்கும் சிகர்களை எடுக்க கெடு வழங்கப்பட்டுள்ளது.