மூலனூரில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பிரச்சாரம்!

4510பார்த்தது
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட
குருணைக்கல்பட்டி, சின்னமருதூர், கம்பரியம்பட்டி, எம். குமாரபாளையம், ஆஞ்சநேயர் கோவில், பட்டுத்துறை,
மடப்பாறை, ராஜீவ் நகர், ரங்கம்பாளையம் பிரிவு, கோனேரிப்பட்டி, எழுகாம்வலசு, எல்லப்பாளையம், அவிநாசிபுரம் காலனி, பொன்னிவாடி ஆகிய 44‌க்கும் மேற்பட்ட பகுதிகளில் இன்று அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் திறந்த வாகனத்தில் நின்றபடியும் சாலையில் இறங்கி பொதுமக்களை சந்தித்தும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து தன்னை வெற்றிபெற செய்யுமாறு,

தான் செல்வந்தராக இருப்பதால் பொது மக்களுக்கு மத்திய அரசிடம் இருந்து வரும் நிதியிலிருந்து ஒரு பைசா கூட கமிஷன் வாங்காமல் அனைத்து நலத்திட்டங்களையும் மக்களுக்காகவே செய்து கொடுக்க போவதாகவும், கடந்த நான்கு ஆண்டுகளாக ஈரோடு நாடாளுமன்ற தொகுதி முழுவதும் தாராபுரம் சட்டமன்ற தொகுதியிலும் 10, ரூபாய் உணவகம் பத்து 10, மருத்துவ சேவை கோவில்களுக்கு நிதி உதவி, அரசு பள்ளி கட்டிடங்கள் புதுப்பித்தல், இஸ்லாமியர்களுக்கு அரிசி, கிறிஸ்தவர்களுக்கு நிதி உதவி என ஜாதி மதம் பார்க்காமல் தனது சொந்தச் செலவில் பல கோடி ரூபாய் செலவழித்து வருவதாகவும் கிராம மக்களிடம் பிரச்சாரத்தின் போது தெரிவித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி