சகோதரரின் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்

5850பார்த்தது
திருச்சி கொட்டப்பட்டி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த சே. கோபி (57). இவரது மனைவி விஜயலெட்சுமி (51) மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகப்பணி மேற்பார்வையாளர். இந்நிலையில் தனது சகோதரரின் இல்ல நிகழ்ச்சிக்காக கோபி, இவரது மனைவி விஜயலெட்சுமி கோபியின் மற்றொரு சகோதரர் கண்ணன் (47) ஆகியோர் காரில் சிவகாசி நோக்கி நேற்று சென்றனர்.

காரை கோபி ஓட்ட மணப்பாறையை அடுத்த மதுரை- திருச்சி நெடுஞ் சாலையில் யாகபுரத்தை கடந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையோர 10அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் விஜயலெட்சுமி மற்றும் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் படுகாயமடைந்த கோபி துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், அதனை தொடர்ந்து மணப்பாறை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து சென்ற துவரங்குறிச்சி போலீஸார் மூவரின் சடலங்களையும் மணப்பாறை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உடற்கூறாய்வு செய்து, மாலையில் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி