செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

52பார்த்தது
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி இன்று காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற காவலை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14இல் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி