இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக அறியப்பட்ட இர்ஃபான் கான் கடந்த 2020ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இர்ஃபானின் மகன் பாபில் அதன்பின் சினிமாவில் நடித்து வருகிறார்.இந்த நிலையில், இர்ஃபான் கானின் நினைவு தினம் வரும் 29ஆம் தேதி வரவிருக்கும் நிலையில், பாபில் கான் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 'சிலநேரம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அப்பாவிடம் செல்வது போல உணர்கிறேன்' என்று பதிவிட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பின் சில மணி நேரங்களில் அந்த பதிவை பாபில் கான் தனது ஸ்டோரியில் இருந்து நீக்கினார்.