ரூ.100 கோடி சொத்துக்கள் பறிமுதல்! தம்பதி கையில் காப்பு

62பார்த்தது
ரூ.100 கோடி சொத்துக்கள் பறிமுதல்! தம்பதி கையில் காப்பு
திருச்சி மாவட்டம் பில்லாதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜானகிராமன் சார்பதிவாளராக பணிபுரிந்தவர். பணி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக தன் பெயரிலும், மனைவி வசந்தி பெயரிலும் சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் இன்று ஜானகிராமன், வசந்திக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ஜானகிராமனின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்து அரசிடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.