மனநலம் குன்றிய மகளை கெடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனை

7827பார்த்தது
மனநலம் குன்றிய மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு வாழ்நாள் சிறை - மகிளா
கோர்ட் அதிரடி தீர்ப்பு. திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், அம்மாபட்டியை சேர்ந்த அழகேசன் என்பவரது மகன் ராஜு (வயது 64). இவருக்கு சுதா, கோகிலா இரண்டு மகள்கள் இருந்தனர்.

அதில் கோகிலா திருமணம் ஆகி சென்று விட்டார். மற்றொரு மகளான சுதா மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். அவரை அவரின் தந்தையான ராஜு பராமரித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு சுதா கர்ப்பமானார். இது குறித்து சுதாவின் சகோதரி கோகிலா விசாரித்த போது சுதாவின் கர்ப்பத்திற்கு காரணம் தனது தந்தை ராஜு தான் என தெரிந்து கொண்டார்.

இதுகுறித்து கோகிலா முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் மீதான வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இதனிடையே சுதா இறந்துவிட்டார்.

இந்த சூழலில் வழக்கு மீதான விசாரணை முடிவடைந்து. நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றவாளியான
ராஜுக்கு வாழ்நாள் சிறையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீ வத்சன் அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

தொடர்புடைய செய்தி