திருச்சி: பாலத்திலிருந்து தவறி விழுந்த முதியவர் பலி

50பார்த்தது
திருச்சி: பாலத்திலிருந்து தவறி விழுந்த முதியவர் பலி
திருச்சி மேலப்புதுார் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து, மது போதையில், முதியவர் தவறி விழுந்து பலியானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருச்சி பாலக்கரை கூனி பஜார் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 45). இவரது தந்தை பாலக்கரை மார்சிங்பேட்டை ஹவுசிங் போர்டில் வசிக்கும் அன்பழகன் (வயது 70). இவர் நேற்று முன்தினம் மது போதையில் மேலப்புதுார் ரயில்வே மேம்பாலத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரத விதமாக அங்கிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அன்பழகனை அப்பகுதி மக்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்பழகன் இறந்தார். இதுகுறித்து வேலு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி