ஏப்.,06-ம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்திக்க உள்ளார். மதுரை விமான நிலையத்தில் மோடியை இபிஎஸ் சந்தித்துப் பேசிய பிறகு, ஓபிஎஸ் பிரதமரை சந்திக்க உள்ளார். ஏற்கனவே மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த இபிஎஸ், மோடியை சந்திக்க இருப்பதால் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.