நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து திருப்பூர் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் நேற்று (மார்.28) மாலை நேசமணி என்பவர் மதுபோதையில் ஏறியுள்ளார். தனது ஊரான தவிட்டுமேடு பகுதியில் இறங்காமல், அரவேனு பகுதியில் சென்றுகொண்டிருந்த பேருந்தின் முன் வழியாக இறங்கியவர், கீழே விழுந்து பேருந்தின் பின் சக்கரத்தில் கால் சிக்கி அலறித்துடித்தார். பின்னர் பேருந்து நிறுத்தப்பட்டது. இதில் அவருக்கு இடது கால் எலும்பு முறிந்து படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.