இறுதிகட்ட பிரச்சாரத்தில் துரை வைகோ

561பார்த்தது
நாடாளுமன்றத் தேர்தல் இறுதி கட்டப் பிரச்சாரத்தில் மதிமுக - அமைச்சர், கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பு

தமிழகத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தீப்பெட்டி சின்னத்தில் துரைவைகோ போட்டியிடுகின்றார். திருச்சி நாடாளுமன்றத்துக்கு உட்பட்ட
திருச்சி கிழக்கு, தெற்கு, திருவரம்பூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் இன்று 6: 00 மணிவுடன் முடிவடைவதையொட்டி இறுதி கட்டப் பிரச்சாரத்தில் மதிமுகவினர் ஈடுபட்டனர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலையில் இருந்து அமைச்சர் கே. என். நேரு, வேட்பாளர் துரைவைகோவுடன் கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பின் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

பிரச்சாரத்தில் திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தை கட்சி, மாக்சிஸ்ட கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் வாகன பேரணியில் தீவிரவாக்கு சேகரிப்பில் திரளாக ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி