வேல் கொடுத்து மகனை வாழ்த்திய பிரேமலதா

64பார்த்தது
வேல் கொடுத்து மகனை வாழ்த்திய பிரேமலதா
மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. எனவே இறுதி கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர். இந்த நிலையில் விருதுநகரில் போட்டியிடும் தனது மகன் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக பிரேமலதா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “ அந்த பராசக்தி முருகனுக்கு மேல் கொடுத்தது போல நானும் எனது மகனுக்கு வேல் கொடுத்துள்ளேன். அவரை வெற்றி பெறச் செய்யுங்கள். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஓய்வு கொடுங்கள். உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் அவருக்கு வேண்டும்” என கூறினார்.

தொடர்புடைய செய்தி