அப்பனா நல்லூர் அன்ன காமாட்சி அம்மன் கும்பாபிஷேக விழா

57பார்த்தது
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் அருள்மிகு அன்ன காமாட்சி அம்மன் திருக்கோவில் கடவுள் மங்களப் பெருவிழா என்னும் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது
.

தொட்டியம் வட்டத்தில் கொளக்குடி அருகே அப்பன நல்லூர் அமைந்துள்ளது. இங்கே அன்ன காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் சமீபத்தில் புனரமைக்கப்பட்டது. புனரமைக்கப்பட்ட கோவிலில் கும்பாபிஷேகம் தமிழிலே நடைபெற்றது. இதை முன்னிட்டு 10ம் தேதி மாலை இறையானை பெறல் , கும்பத்தில் ஆறத்துவாரங்களை ஈர்த்தல், மூத்த பிள்ளையார் முதல் நிலை வேள்வி, நவகோள்கள் நல விண்ணப்பம், எண் திருமகள் வழிபாடு, நிலபதி வேள்வி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 11ஆம் தேதி காலை புனித மண் வழிபாடு, முலைப்பாலிகை வழிபாடு, புனித நீர் வழிபாடு, திருக்குடங்கள் நிறுவுதல், காப்பு கட்டுதல், திண்ணெண்ணம் பூணுதல், சதாசிவ வழிபாடு நடைபெற்று வாத்திய குழுவுடன் ஊர்வலம் நடைபெற்றது. மாலையில் வேள்வி சாலை நுழைவு, வாயிற் காவலர் வழிபாடு, அடியார் திருக்கூட்டம் எழுந்தருளல், அன்ன காமாட்சி அம்மனுக்கு முத்தமிழால் முதற்கால வேள்வி, நிறைபவி நல்கல், பெரும் பேரொளி வழிபாடு, ஆதார பீட வழிபாடு, நவமணி இடல் , எந்திரம் பதித்தல், படிமம் பதித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது

தொடர்புடைய செய்தி