மனைவியுடன் தகராறு மண்ணெண்ணெயால் தீ குளித்த இளைஞர்

542பார்த்தது
மனைவியுடன் தகராறு மண்ணெண்ணெயால் தீ குளித்த இளைஞர்
மணப்பாறையை அடுத்த காட்டுப்பட்டியில் வசித்து வருபவர் கோவிந்தன் மகன் தமிழ்குடிமகன்(28). இவருக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியில் இருந்த அவர் நேற்று மதுபோதையில் வீட்டுக்கு வந்து தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
இதனால் காயமடைந்த தமிழ் குடிமகன் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவிக்கு பின் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மணப்பாறை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி