சிலர் காதுகளில் அழுக்கு இருப்பதாக பட்ஸ், ஹேர்பின்கள், சாவிகள் போன்றவற்றை பயன்படுத்தி நீக்குவார்கள். ஆனால் உண்மையில் இது அழுக்கு கிடையாது. இது காதுகளில் உருவாகும் ஒரு வகை மெழுகு ஆகும். காதுகளில் பூச்சிகள் அல்லது தீங்கு விளைவிக்கும் துகள்கள் நுழைவதை தடுக்க இயற்கை உருவாக்கிய மெழுகு ஆகும். இது சிலருக்கு அதிகப்படியாக சுரந்து காதை அடைக்கலாம். அவர்கள் மட்டும் மருத்துவரை அணுகி, முறையாக நீக்க வேண்டும்.