முன் விரோத காரணமாக தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

545பார்த்தது
முன் விரோத காரணமாக தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
திருச்சி மாவட்டம் மணப்பாறை வீரப்பூர் கோயிலில் கிடாய் வெட்டி தோலுரித்து கறி வெட்டி கொடுக்கும் வேலை செய்து வந்தவர்கள் வீ. பூசாரிப்பட்டியை சேர்ந்த கந்தசாமி மகன் மகாமுனி(37), நடராஜன் மகன் முருகேசன்(27). இவர்கள் இருவரிடையே தொழில் போட்டியில் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் முருகேசன் கறி வெட்டும் அரிவாளால் முனியப்பன் முகத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த முனியப்பன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து மணப்பாறை போலீஸார் வழக்கு பதிந்து முருகேசனை கைது செய்தனர்

தொடர்புடைய செய்தி