கார் - லாரி மோதி விபத்து.! 4 பேர் உயிருடன் எரிந்து பலி

46267பார்த்தது
ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 14) பயங்கர விபத்து நடந்தது. ஃபதேபூரில் உள்ள ஷெகாவதி பகுதியில் லாரியும், காரும் மோதிக்கொண்டதில் கார் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் வெளியில் வர முடியாமல் தீயில் சிக்கினர். தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுப்படுத்த முயன்றனர். அதற்குள் தீ மளமளவென பரவி 4 பேரும் உயிருடன் கருகினர். விபத்து குறித்த வீடியோ வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி