சமூக வலைதளங்களில் ஜிபிலி படங்களை வெளியிடுவதால் மோசடிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாள்களாக சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவால் தயாரிக்கப்பட்ட ஜிபிலி (Ghibli) படங்களைப் பார்க்க முடிகிறது.
இதனால் இணையவாசிகள் பலர் தங்களது படங்களை ChatGPT உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு தளங்களில் பதிவேற்றம் செய்து ஜிபிலி படங்களைத் தயாரித்து வருகின்றனர். இணையவாசிகள் மட்டுமின்றி வர்த்தக நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலதரப்பு மக்களும் தங்களது ஜிபிலி படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். முதலில் குறிப்பிட்ட சில பயனீட்டாளர்களால் மட்டுமே ChatGPT மூலம் ஜிபிலி படங்களைத் தயாரிக்க முடிந்தது. தற்போது பெரும்பாலானவர்களால் அதை இலவசமாகச் செய்யும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், சோஷியல் மீடியாக்களில் உங்களது புகைப்படங்களை பயன்படுத்தி மோசடிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
டிரெண்டிங் மோகத்தில் நீங்கள் பதிவிடும் போட்டோ, பிறந்தநாள் தகவல்களை திருடி, அனுமதியின்றி உங்கள் தரவுகளை எடுக்க முடியும். இதனால், விழிப்போடு இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது. தற்போது டிரெண்டாகும் OpenAI ஜிபிலி செய்தவர்கள் அவர்களது போட்டோ, DOB பதிவு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.