கனடா கிரிக்கெட் அணியின் கேப்டன் நிகோலஸ் போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கிந்திய தீவில் பிறந்து, கனடா கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் நிகோலஸ் லேண்ட்ஸ். சம்பவத்தன்று பார்படோஸ் கிராண்ட்லீ ஆடம்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் 9 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததாக சுங்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த தகவல் நிக்கோலஸின் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.